Saturday, February 17, 2007

நம்ம ஊர் நடு நெலமவாதி!


நம்ம ஊர்ப்பக்கம் பாத்தீங்கன்னா நடு நெலம வாதின்னு சொல்லிக்கிட்டு
நெறயப்பேர் திரியறாங்க!
ஒரு தடவ மாமனுக்கும் மச்சானுக்கும் தகராறுன்னு நம்ம நடுநெலம
வாதியக் கூப்பிட ஊர் மக்க வந்திருந்தாங்க!
பிரச்சன என்னான்னா நம்ம மாமங்காரங் ஒரு ஆயிரம் ரூவாவ
மச்சாங்காரங்கிட்ட குடுத்து வச்சிர்ந்திருக்கான்.
இப்பத் திருப்பிக் கேட்டா மச்சாங்காரன் தர முடியாதுன்னுட்டான்.
சரி நம்ம நடு நெலமக் கார்ரு எப்பட்றா பிரச்சனயத்
தீக்கறார்னுப் பாத்தேன்.
நேரா மச்சாங்கிட்டப் போனவரு ஆயிரத்தையும் புடுங்குனாரு.
மாமங்கிட்ட ஐநூறு, மச்சாங்கிட்ட ஐநூறு எண்ணிக்
குடுத்துட்டுப் போய்ட்டாரு.
நாங் கேட்டதுக்குச் சொல்றாரு :
"ரெண்டுப் பக்கமும் பிரச்சினப் பண்ணிக்கக் கூடாதில்ல - அதாம்ப்பா".

நாங் என்னாச் சொல்றன்னா நாயம்னு தெரிஞ்சா அந்தப்
பக்கஞ் சாஞ்சிட வேண்டியதுதான? இதுல என்னா வெக்கம்?

என்னங்க நாஞ் சொல்றது?

No comments: